நீங்கள் கொண்டுள்ளது காதலா? Infractuation எனப்படும் இனக்கவர்ச்சியா? அறிய வேண்டுமா...? மேலே படியுங்கள்...
உலகம் முழுவதும் பரவி இருக்கிற உன்னதமான உணர்வு எதுன்னா? அது காதல் தான். காதலிக்கிறவங்களுடைய குணநலன்கள்ல வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைய இருக்கறது சகஜமான ஒண்ணு தான்.
ஆனா, காதல்ல வித்தியாசம் இருக்கலாமா? இருக்க கூடாதுல்ல... அதனால காதலுக்கும் Infractuationனு சொல்லப்பட்ற இனக்கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசங்களை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குங்களேன்.
இனக்கவர்ச்சி
தற்காலிகமாக ஒருவர் மீது ஏற்படும் விருப்பம்
பாதுகாப்பற்ற குற்ற உணர்வை ஏற்படுத்துவது.
சேர்ந்து இருப்பது போன்ற மாய உணர்வை ஏற்படுத்தி கனவுகளை அழித்து விடும்.
நம்பிக்கையில்லாத தற்காலிக மகிழ்ச்சியை தரக்கூடியது.
சூழ்நிலைகளை பயன்படுத்தி தப்பித்து கொள்ள வேண்டும் என்ற சுயநல உணர்வை ஏற்படுத்துவது.
இனக்கவர்ச்சி என்பது அர்த்தமற்ற ஆபாச பாலுணர்வின் தூண்டுதல்.
இனக்கவர்ச்சியின் மறுபெயர் "பற்றாக்குறையான நம்பிக்கை".
இனக்கவர்ச்சியால் தூண்டப்பட்டு காரியங்கள் செய்து பின்னாளில் வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தக் கூடியது.
காதல்
ஆழமான நட்புணர்வை உணரக்கூடிய அணையாத நெருப்பு
உண்மையான புரிதலை உருவாக்குவது.
உங்களவர் உங்களுக்கு தான் என்ற வலிமையான உள்ள அன்பை ஏற்படுத்துவது.
நம்பிக்கையினால் இரு உள்ளங்கள் இணைக்கப்படுவது.
பொறுமையாய் காத்திருந்து எதிர்காலத்தை திட்டமிட்டு காதலித்தவரை கைப்பிடிக்க வேண்டும் என்ற மனோநிலையை உருவாக்கக்கூடியது.
பண்பட்ட நட்புணர்வின் உண்மை வெளிப்பாடு.
காதலின் மறுபெயர் நம்பிக்கை. எதிலும் எப்போதும் நம்புதல்.
காதல் உங்களை உயர்த்தும். உங்கள் எண்ணங்களை மேம்படுத்துவது. முன்பு இருந்ததை விட உங்களை சிறந்தவர்களாக்குவது.
Computer Service At Your Door Step
System Upgrade, Computer service , UPS, Moniter, Mother board , Hdd , Chip level Service , networking , laser jet and ink jet toner refill , Special care for Laptops , 2nd System Also Available
Chennai
99761 99632
Chennai
99761 99632
Wednesday, December 19, 2007
காதலியை கவர சில வழிகள்
* எப்பொழுதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் பெண்கள்.
* ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் "நெய்ல் பாலிஷ்"-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.
* காதலுக்கு உண்மையான சாவி எதுன்னா? அது உங்க காதலியைப் பத்தி நீங்க தெரிஞ்சு வைச்சுக்கறது தான். அதனால் வாழ்க்கையை பொருத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? அப்படின்னு முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க...
* உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைங்க. அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது "டேட்டிங்" போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.
* ஏன்னா சில பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க தங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க. அதனால எந்த நேரத்திலும் அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்துகிட்டு உங்க காதலியை முழுமையாக தெரிஞ்ச்சு வைச்சுக்கங்க.
* இன்னொரு விஷயங்க... தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல, அப்படின்னா... அவங்க ரொம்பவே "டல்" ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. பொறுமையா காதுல வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்ச வைச்சு அதை செயல்படுத்துறதுக்கு தொடங்குங்க.
* என்னங்க! இப்பவே ரெடி ஆய்ட்டீங்க போல!!!
* ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் "நெய்ல் பாலிஷ்"-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.
* காதலுக்கு உண்மையான சாவி எதுன்னா? அது உங்க காதலியைப் பத்தி நீங்க தெரிஞ்சு வைச்சுக்கறது தான். அதனால் வாழ்க்கையை பொருத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? அப்படின்னு முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க...
* உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைங்க. அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது "டேட்டிங்" போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.
* ஏன்னா சில பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க தங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க. அதனால எந்த நேரத்திலும் அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்துகிட்டு உங்க காதலியை முழுமையாக தெரிஞ்ச்சு வைச்சுக்கங்க.
* இன்னொரு விஷயங்க... தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல, அப்படின்னா... அவங்க ரொம்பவே "டல்" ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. பொறுமையா காதுல வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்ச வைச்சு அதை செயல்படுத்துறதுக்கு தொடங்குங்க.
* என்னங்க! இப்பவே ரெடி ஆய்ட்டீங்க போல!!!
காதலின் மொழி....... முத்தம்
வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றைக் கூட உங்களின் முத்தம் சொல்லிவிடும் சத்தமில்லாமல்.
ஆம்.... நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா?
முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள்.
முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இனிதான நிகழ்வாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
அவர்தான் முதலில் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டாம். உங்களுக்கான காதலை நீங்களே முதலில் வெளிப்படுத்தலாம் என்பதில் ஐயமில்லை.
முத்தத்தில் பல வகையுண்டு. அன்னையின் முத்தம், சகோதரரின் முத்தம், குழந்தையின் முத்தம், நண்பர்களின் முத்தம், காதலர்களின் முத்தம் என இது நீண்டு கொண்டே செல்லும்.
காலையில் தரும் முத்தம் முழு நாளையுமே இனிதாக்கும். மாலையில் தரும் முத்தும் மனதை உற்சாகப்படுத்தும். இரவில் தரும் முத்தம் இதமான தூக்கத்தை தரும் என முத்தத்திற்கு இவ்வளவு தத்துவங்கள் சொல்கிறார்கள் மருத்துவர்களும்.
ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு தரும் முத்தத்தினால் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது. முத்தம் பெறுபவருக்கு மட்டுமல்லாமல் தருபவருக்கும் இன்பதை அளிக்கிறது.
நீங்கள் உடல் நலத்தோடும், புத்துணர்ச்சியோடும், எதிலும் வெற்றியுடனும் வாழ விரும்பினால் தினமும் வீட்டில் இருந்து கிளம்பும்போது உங்களது வாழ்க்கைத் துணைக்கு முத்தமளித்துவிட்டு கிளம்புங்கள். அப்புறம் பாருங்கள் உங்களது நாள் இனிய நாளாக மட்டுமல்ல வெற்றிகள் கிட்டும் நாளாகவும் அமையும்.
சரி முத்தத்தில் இவ்வளவுதானா? என்று சப்புக் கொட்டாதீர்கள். முத்தத்தினால் உடலுக்கு கிட்டும் நன்மைகளும் ஏராளம்... ஏராளம்...
முத்தத்தினால் கிட்டும் நன்மைகளைக் காணலாமா?
* முத்தம் உங்களது வாயை சுத்தம் செய்யும் கருவியாம். சிரிக்காதீர்கள். உண்மைதான். உங்களது வாயை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய விரும்பினால் அதற்கு ஒரே எளிய வழி முத்தம்.
* கண்களை மூடிக் கொண்டு மூச்சை நிறுத்தி முத்தம் கொடுப்பதன் மூலம் கண்களுக்கும், இதயத்திற்கும் நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது. டென்ஷனையும் குறைக்கிறது. எனவே நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது கிடைக்கும் முத்தத்திற்கு மதிப்பு அதிகம்.
* நீண்ட முத்தத்தினால் உங்கள் உடலில் தேவையற்ற காலரிகள் அழிகின்றன. இதனால் உங்கள் உடலை எப்போதும் கச்சிதமாக வைத்துக் கொள்ளலாம்.
* பிரெஞ்ச் முத்தத்தினால் உங்கள் வாய் தசைகளுக்கும், கன்னத்திற்கும் எளிதான உடற்பயிற்சி கிட்டுகிறது. இதனால் உங்கள் முகம் எப்போதும் இளமையான தோற்றத்தை இழக்காது.
* அன்பானவர் அளிக்கும் எதிர்பாராத முத்தத்தினால் உங்கள் இதயம் படபடக்கும். அப்போது அதிகமான ரத்தம் உடலுக்குப் பாயும். அப்போது எல்லா நரம்புகளும் வேலை செய்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
நீங்களும் உங்களுக்கு அன்பானவர்களுக்கு முத்தம் அளித்து அதன் மூலம் கிட்டும் பலன்களை அனுபவியுங்கள். எங்களுக்கும் தெரிவியுங்கள்.
ஆம்.... நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா?
முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள்.
முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இனிதான நிகழ்வாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
அவர்தான் முதலில் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டாம். உங்களுக்கான காதலை நீங்களே முதலில் வெளிப்படுத்தலாம் என்பதில் ஐயமில்லை.
முத்தத்தில் பல வகையுண்டு. அன்னையின் முத்தம், சகோதரரின் முத்தம், குழந்தையின் முத்தம், நண்பர்களின் முத்தம், காதலர்களின் முத்தம் என இது நீண்டு கொண்டே செல்லும்.
காலையில் தரும் முத்தம் முழு நாளையுமே இனிதாக்கும். மாலையில் தரும் முத்தும் மனதை உற்சாகப்படுத்தும். இரவில் தரும் முத்தம் இதமான தூக்கத்தை தரும் என முத்தத்திற்கு இவ்வளவு தத்துவங்கள் சொல்கிறார்கள் மருத்துவர்களும்.
ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு தரும் முத்தத்தினால் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது. முத்தம் பெறுபவருக்கு மட்டுமல்லாமல் தருபவருக்கும் இன்பதை அளிக்கிறது.
நீங்கள் உடல் நலத்தோடும், புத்துணர்ச்சியோடும், எதிலும் வெற்றியுடனும் வாழ விரும்பினால் தினமும் வீட்டில் இருந்து கிளம்பும்போது உங்களது வாழ்க்கைத் துணைக்கு முத்தமளித்துவிட்டு கிளம்புங்கள். அப்புறம் பாருங்கள் உங்களது நாள் இனிய நாளாக மட்டுமல்ல வெற்றிகள் கிட்டும் நாளாகவும் அமையும்.
சரி முத்தத்தில் இவ்வளவுதானா? என்று சப்புக் கொட்டாதீர்கள். முத்தத்தினால் உடலுக்கு கிட்டும் நன்மைகளும் ஏராளம்... ஏராளம்...
முத்தத்தினால் கிட்டும் நன்மைகளைக் காணலாமா?
* முத்தம் உங்களது வாயை சுத்தம் செய்யும் கருவியாம். சிரிக்காதீர்கள். உண்மைதான். உங்களது வாயை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய விரும்பினால் அதற்கு ஒரே எளிய வழி முத்தம்.
* கண்களை மூடிக் கொண்டு மூச்சை நிறுத்தி முத்தம் கொடுப்பதன் மூலம் கண்களுக்கும், இதயத்திற்கும் நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது. டென்ஷனையும் குறைக்கிறது. எனவே நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது கிடைக்கும் முத்தத்திற்கு மதிப்பு அதிகம்.
* நீண்ட முத்தத்தினால் உங்கள் உடலில் தேவையற்ற காலரிகள் அழிகின்றன. இதனால் உங்கள் உடலை எப்போதும் கச்சிதமாக வைத்துக் கொள்ளலாம்.
* பிரெஞ்ச் முத்தத்தினால் உங்கள் வாய் தசைகளுக்கும், கன்னத்திற்கும் எளிதான உடற்பயிற்சி கிட்டுகிறது. இதனால் உங்கள் முகம் எப்போதும் இளமையான தோற்றத்தை இழக்காது.
* அன்பானவர் அளிக்கும் எதிர்பாராத முத்தத்தினால் உங்கள் இதயம் படபடக்கும். அப்போது அதிகமான ரத்தம் உடலுக்குப் பாயும். அப்போது எல்லா நரம்புகளும் வேலை செய்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
நீங்களும் உங்களுக்கு அன்பானவர்களுக்கு முத்தம் அளித்து அதன் மூலம் கிட்டும் பலன்களை அனுபவியுங்கள். எங்களுக்கும் தெரிவியுங்கள்.
என் காதல் நினைவுகள்
எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போகும் அந்த பசுமையான நினைவுகள் என்னுடைய வாழ்க்கையிலும் வந்தது. அறக்க, பறக்க திரியும் தற்போதைய, இந்த இயந்திரமான வாழ்க்கையில், என்னையும் அறியாமல் என் எண்ண ஓட்டங்களில் அந்த நினைவுகள் அவ்வப்போது வந்து போவதுண்டு. ஏன் என்று எனக்குள் நான் பல முறை கேட்டதும் உண்டு. வரும் பதில் ....மாற்றங்களும், மறதியும் நிறைந்த மனித வாழ்க்கையில் அது மட்டும் மறக்க முடியாத பருவமடா.
பள்ளி படிப்பு முடிந்தது. இனி கல்லூரி... படிக்க தேவையில்லை, கிளாஸை கட்டடித்து விட்டு சினிமாவிற்கு போகலாம், என எண்ணற்ற கற்பனைகளோடும், கனவுகளோடும் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன். மிஞ்சியது ஏமாற்றமே. கல்லூரியில் உள்ள துறைகளில் மிகவும் கண்டிப்பான துறையில் எங்கள் துறை முதலிடம். தலைமுடி கொஞ்சம் அதிகமாக இருந்தால் துறை தலைவரே முடியை வெட்டி விடுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சற்று ஆறுதலான விஷயம். மொழி பாடங்களுக்குகான வகுப்புகள் பொருளாதார துறையுடன் இணைந்து நடப்பது. அங்கு தான், நான் என்னவளை பார்த்தேன். இப்போது நான் அவ்வாறு சொல்வது சரியல்ல. அதற்கான விடை முடிவில் உங்களுக்கே தெரியும். அழகாயிருந்தால், ஆரவாரமிருக்கும். அறிவிருந்தால் ஆணவமிருக்கும் என, என் அடிமனதில் இருந்த எண்ணம் அவளை பார்த்தவுடன் தூள் தூளானது. அமைதி, அடக்கம், அழகு, அறிவு என பல பண்புகளை ஒருசேர தன்னகத்தே கொண்டிருந்தாள்.
இதுவே என் பார்வை அவள் மீது விழக்காரணம். அவளை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அவள் வீடருகே உள்ள கடை ஒன்றில் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். அதேபோல், அவளது குடும்பம், குடும்பச் சூழல், அவளுக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது, ஏன் அவ்வளவு... குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அவளை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் என்றே சொல்லலாம். ஆனால் ஒன்றை தவிர.
அவள் விரும்பும் நடிகர், என் தலைவன் ஆனான். அவள் வரும் பாதையே என் பாதையானது. இப்படியே என் கல்லூரி பருவம் ஓராண்டு உருண்டோடிய நிலையில் நான் அவளை விரும்புவது அவளுக்கு தெரியவந்தது. எனினும், எந்தவித கருத்து பரிமாற்றங்களோ, எண்ணப்பரிமாற்றங்களோ எங்களுக்குள் இல்லை. ஓரிரு புண்சிரிப்புகள் மட்டுமே சிந்துவாள், அந்த நாளில் என் கால்கள் தரையில் படாது.
ஒவ்வொரு நாளும் என்னென்ன கலரில், எந்த வகையான உடை அணிந்து வருகிறாள் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வேன். அவளிடம் எத்தனை டிரஸ் இருக்கிறது என்று எண்ணிடம் என் நண்பர்கள் கேட்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை அவள் வந்து என்னிடம் பேசுவாள் என்று. அந்த மூன்று வார்த்தை, அதற்காக நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று எனக்கு தெரியாது. அவள் சென்ன அந்த மூன்று வார்த்தை ஹேப்பி நியூ இயர். அந்த வருஷம் நான் கொண்டாடிய புத்தாண்டை என்னால் என்றும் மறக்க முடியாது.
காலங்கள் கடந்தன. கிட்டதட்ட என் கல்லூரி வாழ்க்கையில் இரண்டாண்டுகள் போகிவிட்டன. ஓரிரு வார்ததைகள் மட்டுமே பேசிய நிலையில் எப்படி என் காதலை அவளிடம் போய் சொல்வதென்று மனதுக்குள் குழப்பம். வீட்டில் பலமுறை சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவளை பார்த்தவுடன் வார்த்தைகள் வருவதில்லை. அதற்கும் மேல் என்னால் காதலை சொல்லாமல் இருக்க முடியவில்லை. உண்டா , இல்லையா என்று கேட்டுவிட மனசு துடித்தது.
அந்த நாளும் வந்தது. எனக்கு ரொம்பப் பிடித்த மஞ்சள் கலர் சுடிதாரில் அவள் அன்று கல்லூரி வந்திருந்தாள். மஞ்சள் கலர் சுடிதாரில் அன்று ரொம்ப அழகாக இருந்தாள். அன்று மாலை வழக்கம் போல் கல்லூரி முடிந்தது. அவள் கிளம்பும் முன்பே நான் கிளம்பி விட்டேன். அவள் வரும் பாதையில் அவளுக்காக காத்திருந்தேன். அன்று இந்தியா - ஆஸ்ட்ரேலியா விளையாடிய ஷார்ஜா கோப்பை கடைசி போட்டி. போட்டியை காண வீட்டில் எனக்காக எல்லோரும் காத்திருந்தார்கள்.
ஆனால்... நானோ அவள் வரும் பாதையில்... அவளும் வந்தாள். பொய்யான பெயரில் தான் அழைக்கிறேன். ரம்யா ஒரு நிமிஷம். உங்கிட்ட பேசனும். என்ன அலெக்ஸ் இங்க நிக்கிற. உன்கிட்ட பேசனும் ரம்யா. என்ன சொல்லு. ரம்யா நான் உன்ன லவ் பண்ணுரேன். ஐ.லவ்.யூ ரம்யா. இரண்டு நிமிஷம் மவுனமாக இருந்தாள். என்ன வார்த்தை அவள் வாயில் இருந்து வரும் என, என் எண்ண ஓட்டங்கள் அலைபாய்ந்தன. மனதுக்குள் குலதெய்வம் எல்லாம் வந்து போனது.
அவள் சொன்ன அந்த மூன்று வார்த்தை.. நான் எதிர்பார்க்காத வார்த்தை. "நீ அண்ணன் மாதிரி" .....
பள்ளி படிப்பு முடிந்தது. இனி கல்லூரி... படிக்க தேவையில்லை, கிளாஸை கட்டடித்து விட்டு சினிமாவிற்கு போகலாம், என எண்ணற்ற கற்பனைகளோடும், கனவுகளோடும் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன். மிஞ்சியது ஏமாற்றமே. கல்லூரியில் உள்ள துறைகளில் மிகவும் கண்டிப்பான துறையில் எங்கள் துறை முதலிடம். தலைமுடி கொஞ்சம் அதிகமாக இருந்தால் துறை தலைவரே முடியை வெட்டி விடுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சற்று ஆறுதலான விஷயம். மொழி பாடங்களுக்குகான வகுப்புகள் பொருளாதார துறையுடன் இணைந்து நடப்பது. அங்கு தான், நான் என்னவளை பார்த்தேன். இப்போது நான் அவ்வாறு சொல்வது சரியல்ல. அதற்கான விடை முடிவில் உங்களுக்கே தெரியும். அழகாயிருந்தால், ஆரவாரமிருக்கும். அறிவிருந்தால் ஆணவமிருக்கும் என, என் அடிமனதில் இருந்த எண்ணம் அவளை பார்த்தவுடன் தூள் தூளானது. அமைதி, அடக்கம், அழகு, அறிவு என பல பண்புகளை ஒருசேர தன்னகத்தே கொண்டிருந்தாள்.
இதுவே என் பார்வை அவள் மீது விழக்காரணம். அவளை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அவள் வீடருகே உள்ள கடை ஒன்றில் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். அதேபோல், அவளது குடும்பம், குடும்பச் சூழல், அவளுக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது, ஏன் அவ்வளவு... குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அவளை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் என்றே சொல்லலாம். ஆனால் ஒன்றை தவிர.
அவள் விரும்பும் நடிகர், என் தலைவன் ஆனான். அவள் வரும் பாதையே என் பாதையானது. இப்படியே என் கல்லூரி பருவம் ஓராண்டு உருண்டோடிய நிலையில் நான் அவளை விரும்புவது அவளுக்கு தெரியவந்தது. எனினும், எந்தவித கருத்து பரிமாற்றங்களோ, எண்ணப்பரிமாற்றங்களோ எங்களுக்குள் இல்லை. ஓரிரு புண்சிரிப்புகள் மட்டுமே சிந்துவாள், அந்த நாளில் என் கால்கள் தரையில் படாது.
ஒவ்வொரு நாளும் என்னென்ன கலரில், எந்த வகையான உடை அணிந்து வருகிறாள் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வேன். அவளிடம் எத்தனை டிரஸ் இருக்கிறது என்று எண்ணிடம் என் நண்பர்கள் கேட்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை அவள் வந்து என்னிடம் பேசுவாள் என்று. அந்த மூன்று வார்த்தை, அதற்காக நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று எனக்கு தெரியாது. அவள் சென்ன அந்த மூன்று வார்த்தை ஹேப்பி நியூ இயர். அந்த வருஷம் நான் கொண்டாடிய புத்தாண்டை என்னால் என்றும் மறக்க முடியாது.
காலங்கள் கடந்தன. கிட்டதட்ட என் கல்லூரி வாழ்க்கையில் இரண்டாண்டுகள் போகிவிட்டன. ஓரிரு வார்ததைகள் மட்டுமே பேசிய நிலையில் எப்படி என் காதலை அவளிடம் போய் சொல்வதென்று மனதுக்குள் குழப்பம். வீட்டில் பலமுறை சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவளை பார்த்தவுடன் வார்த்தைகள் வருவதில்லை. அதற்கும் மேல் என்னால் காதலை சொல்லாமல் இருக்க முடியவில்லை. உண்டா , இல்லையா என்று கேட்டுவிட மனசு துடித்தது.
அந்த நாளும் வந்தது. எனக்கு ரொம்பப் பிடித்த மஞ்சள் கலர் சுடிதாரில் அவள் அன்று கல்லூரி வந்திருந்தாள். மஞ்சள் கலர் சுடிதாரில் அன்று ரொம்ப அழகாக இருந்தாள். அன்று மாலை வழக்கம் போல் கல்லூரி முடிந்தது. அவள் கிளம்பும் முன்பே நான் கிளம்பி விட்டேன். அவள் வரும் பாதையில் அவளுக்காக காத்திருந்தேன். அன்று இந்தியா - ஆஸ்ட்ரேலியா விளையாடிய ஷார்ஜா கோப்பை கடைசி போட்டி. போட்டியை காண வீட்டில் எனக்காக எல்லோரும் காத்திருந்தார்கள்.
ஆனால்... நானோ அவள் வரும் பாதையில்... அவளும் வந்தாள். பொய்யான பெயரில் தான் அழைக்கிறேன். ரம்யா ஒரு நிமிஷம். உங்கிட்ட பேசனும். என்ன அலெக்ஸ் இங்க நிக்கிற. உன்கிட்ட பேசனும் ரம்யா. என்ன சொல்லு. ரம்யா நான் உன்ன லவ் பண்ணுரேன். ஐ.லவ்.யூ ரம்யா. இரண்டு நிமிஷம் மவுனமாக இருந்தாள். என்ன வார்த்தை அவள் வாயில் இருந்து வரும் என, என் எண்ண ஓட்டங்கள் அலைபாய்ந்தன. மனதுக்குள் குலதெய்வம் எல்லாம் வந்து போனது.
அவள் சொன்ன அந்த மூன்று வார்த்தை.. நான் எதிர்பார்க்காத வார்த்தை. "நீ அண்ணன் மாதிரி" .....
காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு......
* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.
* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்
* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்
* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.
* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.
* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்
* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்
* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.
* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.
* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.
* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.
* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.
* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.
* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.
* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.
இன்னும் ஏராளம் ஏராளம்...
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.
* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்
* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்
* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.
* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.
* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்
* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்
* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.
* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.
* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.
* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.
* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.
* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.
* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.
* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.
இன்னும் ஏராளம் ஏராளம்...
Monday, December 17, 2007
ரோசாப்பூ மனசுக்காரி ரோசமுள்ள கோவக்காரி
ரோசாப்பூ மனசுக்காரி
ரோசமுள்ள கோவக்காரி
ஆச வச்சேன் அவமேல
மீச வச்சேன் ஒதட்டு மேல
குளத்தங்கரைப் படிக்கட்டுல
குளிக்க வருவா வெடலப் புள்ள
கண்ணாலம் பண்ணவான்னு
கண்ணால கேட்டுப்புட்டேன்
முட்டக் கண்ணு சிவந்திருச்சு
கெட்ட கோவம் வந்திருச்சு
தப்புக் கணக்குப் போட்டுப்புட்டா
மைனருன்னு நினைச்சுப்புட்டா
பஞ்சாயத்தக் கூட்டிப்புட்டா
பருத்திபோல வெடிச்சுப்புட்டா
ஊர் கூடி திட்டினாக
உறவெல்லாம் சிரிச்சாக
மான மருவாதி கப்பலேறியாச்சு
ரெண்டாயிரம் கப்பங் கட்டியாச்சு
அவ மேல ஆசப்பட்ட கதைய
எவகிட்ட சொல்லி அழுவ?
மண்ணுக்குள்ள வயிரம்போல
மனசுக்குள்ள காதல் கெடக்கே!
ரெண்டு நாளு பட்டினி கெடந்தேன்
பட்டணம் போக மூட்ட கட்டுனேன்
கருத்தப் புள்ளய காதலிச்ச கதய
கடுதாசியில இறக்கிவெச்சேன்
வெடுவெடுன்னு நடந்து போயி
வீசிப்புட்டேன் அவ மேல
திரும்பிக்கூடப் பார்க்காம
பதிலேதும் கேட்காம
வீறாப்பாக் கெளம்பி
வெரசா ரயிலப் புடிச்சுப்புட்டேன்
வெறப்பா வந்தாலும்
முறப்பா நின்னாலும்
உள்ளுக்குள்ள துடிதுடிக்குது
உசிருக்குள்ள அவ நினப்பு!
புகையக் கக்கிப்புட்டு
கெளம்புது செவத்த ரயிலு!
ரயிலுக்கும் எரியுமோ
என்னப்போல உள்மனசு?
கண்ண மூடி ஒக்காந்தா
கனவுல அவ முகம்
கண்ணு முழிச்சுப் பார்த்தா
எதிர்தாப்புல அவமுகம்!
கனவா நனவான்னு
தெரியாம நா(ன்) குழம்ப
முத்துப்பல்லு காட்டி
முல்லப்பூ அவ சிரிக்கா!
கண்ணால புரியாத காதல
கடுதாசியால புரிஞ்சிருக்கா
ஓன்னு அழுதிருக்கா
ஓடோடி வந்திருக்கா
தாலி கட்டப் போறேன்
தாரமாக்கப் போறேன்
பட்டணம் போயி, பத்தாயிரம்
சம்பாதிக்கப் போறேன்
கண்ணாலம் பண்ணப்போறேன்
கருத்த புள்ளகூட வாழப்போறேன்
ஏலேய் ட்ரைவரு!
வெரசா ஓட்டு இது ரயிலு வண்டியா
இல்ல கட்ட வண்டியா?
ரோசமுள்ள கோவக்காரி
ஆச வச்சேன் அவமேல
மீச வச்சேன் ஒதட்டு மேல
குளத்தங்கரைப் படிக்கட்டுல
குளிக்க வருவா வெடலப் புள்ள
கண்ணாலம் பண்ணவான்னு
கண்ணால கேட்டுப்புட்டேன்
முட்டக் கண்ணு சிவந்திருச்சு
கெட்ட கோவம் வந்திருச்சு
தப்புக் கணக்குப் போட்டுப்புட்டா
மைனருன்னு நினைச்சுப்புட்டா
பஞ்சாயத்தக் கூட்டிப்புட்டா
பருத்திபோல வெடிச்சுப்புட்டா
ஊர் கூடி திட்டினாக
உறவெல்லாம் சிரிச்சாக
மான மருவாதி கப்பலேறியாச்சு
ரெண்டாயிரம் கப்பங் கட்டியாச்சு
அவ மேல ஆசப்பட்ட கதைய
எவகிட்ட சொல்லி அழுவ?
மண்ணுக்குள்ள வயிரம்போல
மனசுக்குள்ள காதல் கெடக்கே!
ரெண்டு நாளு பட்டினி கெடந்தேன்
பட்டணம் போக மூட்ட கட்டுனேன்
கருத்தப் புள்ளய காதலிச்ச கதய
கடுதாசியில இறக்கிவெச்சேன்
வெடுவெடுன்னு நடந்து போயி
வீசிப்புட்டேன் அவ மேல
திரும்பிக்கூடப் பார்க்காம
பதிலேதும் கேட்காம
வீறாப்பாக் கெளம்பி
வெரசா ரயிலப் புடிச்சுப்புட்டேன்
வெறப்பா வந்தாலும்
முறப்பா நின்னாலும்
உள்ளுக்குள்ள துடிதுடிக்குது
உசிருக்குள்ள அவ நினப்பு!
புகையக் கக்கிப்புட்டு
கெளம்புது செவத்த ரயிலு!
ரயிலுக்கும் எரியுமோ
என்னப்போல உள்மனசு?
கண்ண மூடி ஒக்காந்தா
கனவுல அவ முகம்
கண்ணு முழிச்சுப் பார்த்தா
எதிர்தாப்புல அவமுகம்!
கனவா நனவான்னு
தெரியாம நா(ன்) குழம்ப
முத்துப்பல்லு காட்டி
முல்லப்பூ அவ சிரிக்கா!
கண்ணால புரியாத காதல
கடுதாசியால புரிஞ்சிருக்கா
ஓன்னு அழுதிருக்கா
ஓடோடி வந்திருக்கா
தாலி கட்டப் போறேன்
தாரமாக்கப் போறேன்
பட்டணம் போயி, பத்தாயிரம்
சம்பாதிக்கப் போறேன்
கண்ணாலம் பண்ணப்போறேன்
கருத்த புள்ளகூட வாழப்போறேன்
ஏலேய் ட்ரைவரு!
வெரசா ஓட்டு இது ரயிலு வண்டியா
இல்ல கட்ட வண்டியா?
Subscribe to:
Posts (Atom)